தவறான பாதையில் வந்த
ஓட்டுநருக்கும் ,Friday, September 13, 2013
ட்ராபிக்
Wednesday, September 11, 2013
கூவம் ஆறு
அழகிய ஆறு அன்றோ !!
அழுகிய சேறு இன்றோ !!
கூவம் ஆறு என்றோ !!
காணா நீரு
கலக்குது கழிவு நீரு
பானா காத்தாடி
பறக்குது பாரு !!
கரைதானே சிறுவனின்
விளையாட்டரங்கம் !!
கடல்தானே கூவம்
கூடலரங்கம் !!
அழுகிய சேறு இன்றோ !!
கூவம் ஆறு என்றோ !!
காணா நீரு
கலக்குது கழிவு நீரு
பானா காத்தாடி
பறக்குது பாரு !!
கரைதானே சிறுவனின்
விளையாட்டரங்கம் !!
கடல்தானே கூவம்
கூடலரங்கம் !!
Saturday, September 7, 2013
தேன்மொழி
நீ -ஒரு தமிழெழுத்து -என்
வாழ்வை நிர்ணயிக்கும்
தலையெழுத்து !
நீயே என் மூச்சு -எனும்
மூன்றெழுத்து !
உன்னுள்ளே பதிந்திருக்கும்
தமிழெழுத்து !!
ஆம்
உன் முகவாட்டம் ஓர் உயிரெழுத்து -அதில்
ஒளிந்திருக்கும் சில எழுத்து !!
சிரிப்பு வந்தால் 'அ ' என்கிறாய் !
சிலிர்ப்பு வந்தால் 'இ' என்கிறாய் !
'ஒ' என்ற எழுத்து தமிழில் - ஒன்று
உன்னுள்ளே பதிர்ந்திருப்பதோ - இரண்டு !
அதுவே ,
ஒலியைக் கேட்க்கும் காது !!
முகத்தில் உயிரெழுத்து மட்டுமா
இருக்கிறது !!
என் உயிரை எடுக்கும் ஆயுதமல்லவா
இருக்கிறது !!
அது எது !!
உன் அழகான சிறகுகள் விரித்த
உந்தன் இரு விழிகள் !!
உனை வர்ணிக்க வார்த்தைகள்
கொட்டிக்கிடக்கிறது -உன்னில்
நீயே எடுத்துக்கொள்
எனை வாழ்க்கையில்-சேர்த்துகொள் !!
Friday, September 6, 2013
காதல் கவிதை
உள்ளதை சொல்லிடவா - என்
உள்ளத்தை அள்ளிடவா !
தீப்பொறி பட்டால்தான்
மெழுகு கூட உருகும் - உன்
பார்வை பட்டாலே - என்
மேனி என்றும் இளகும் !!
கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு - செல்லாதே !
கலவரம் செய்தாலும் பரவாயில்லை
உனை காணாமல்
எனை கொல்லாதே !
மெழுகு சிலைபோன்றவளே
உனைக் கண்டால் - நான்
சிலையாகிறேன் !!
என் வாழ்வில் அரசியாக - நான்
விலையாகிறேன் !!
என் வாழ்வில் வந்துவிடு !
என் வாழ்க்கையை தந்துவிடு
Friday, August 30, 2013
விநாயகர் சதுர்த்தி - 2013
முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கெல்லாம்
முதல்வனே !
சிவனின்
புதல்வனே !
யானை முகம் கொண்ட
ஆதவனே !
தம்பிக்கு துணை நின்ற
தூயவனே !
சமய யோசனையால்
ஞான பழத்தை வென்றெடுத்த
நாயகனே !
இசையின் நாதமே !
உன் தும்பிக்கையே
எங்கள் வாழ்வின்
நம்பிக்கை !
வாழ்க இறைவா !
தேவர்களுக்கெல்லாம்
முதல்வனே !
சிவனின்
புதல்வனே !
யானை முகம் கொண்ட
ஆதவனே !
தம்பிக்கு துணை நின்ற
தூயவனே !
சமய யோசனையால்
ஞான பழத்தை வென்றெடுத்த
நாயகனே !
இசையின் நாதமே !
உன் தும்பிக்கையே
எங்கள் வாழ்வின்
நம்பிக்கை !
வாழ்க இறைவா !
Subscribe to:
Posts (Atom)