Friday, September 6, 2013

காதல் கவிதை


உள்ளதை சொல்லிடவா - என்
உள்ளத்தை அள்ளிடவா !

தீப்பொறி பட்டால்தான்
மெழுகு கூட உருகும்  - உன்
பார்வை பட்டாலே - என்
மேனி என்றும் இளகும் !!

கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு - செல்லாதே !
கலவரம் செய்தாலும் பரவாயில்லை
உனை காணாமல்
எனை கொல்லாதே !

மெழுகு  சிலைபோன்றவளே
உனைக்  கண்டால் - நான்
சிலையாகிறேன் !!

என் வாழ்வில்  அரசியாக - நான்
விலையாகிறேன் !!

என் வாழ்வில் வந்துவிடு !
என்  வாழ்க்கையை தந்துவிடு

No comments: