Saturday, September 7, 2013

தேன்மொழி


நீ -ஒரு தமிழெழுத்து  -என்
வாழ்வை நிர்ணயிக்கும்
தலையெழுத்து !

நீயே என் மூச்சு  -எனும்
மூன்றெழுத்து !

உன்னுள்ளே பதிந்திருக்கும்
தமிழெழுத்து !!
ஆம்

உன் முகவாட்டம்  ஓர் உயிரெழுத்து  -அதில்
ஒளிந்திருக்கும் சில எழுத்து !!

சிரிப்பு  வந்தால்  'அ ' என்கிறாய் !
சிலிர்ப்பு  வந்தால் 'இ' என்கிறாய் !
'ஒ' என்ற  எழுத்து தமிழில்  - ஒன்று
உன்னுள்ளே பதிர்ந்திருப்பதோ - இரண்டு !
அதுவே ,
ஒலியைக்  கேட்க்கும்  காது !!

முகத்தில் உயிரெழுத்து மட்டுமா
இருக்கிறது !!
என் உயிரை எடுக்கும் ஆயுதமல்லவா
இருக்கிறது !!
அது எது !!
உன் அழகான சிறகுகள்  விரித்த
உந்தன் இரு விழிகள் !!

உனை  வர்ணிக்க  வார்த்தைகள்
கொட்டிக்கிடக்கிறது -உன்னில்

நீயே எடுத்துக்கொள்
எனை வாழ்க்கையில்-சேர்த்துகொள் !!



 


No comments: