Saturday, September 7, 2013

தேன்மொழி


நீ -ஒரு தமிழெழுத்து  -என்
வாழ்வை நிர்ணயிக்கும்
தலையெழுத்து !

நீயே என் மூச்சு  -எனும்
மூன்றெழுத்து !

உன்னுள்ளே பதிந்திருக்கும்
தமிழெழுத்து !!
ஆம்

உன் முகவாட்டம்  ஓர் உயிரெழுத்து  -அதில்
ஒளிந்திருக்கும் சில எழுத்து !!

சிரிப்பு  வந்தால்  'அ ' என்கிறாய் !
சிலிர்ப்பு  வந்தால் 'இ' என்கிறாய் !
'ஒ' என்ற  எழுத்து தமிழில்  - ஒன்று
உன்னுள்ளே பதிர்ந்திருப்பதோ - இரண்டு !
அதுவே ,
ஒலியைக்  கேட்க்கும்  காது !!

முகத்தில் உயிரெழுத்து மட்டுமா
இருக்கிறது !!
என் உயிரை எடுக்கும் ஆயுதமல்லவா
இருக்கிறது !!
அது எது !!
உன் அழகான சிறகுகள்  விரித்த
உந்தன் இரு விழிகள் !!

உனை  வர்ணிக்க  வார்த்தைகள்
கொட்டிக்கிடக்கிறது -உன்னில்

நீயே எடுத்துக்கொள்
எனை வாழ்க்கையில்-சேர்த்துகொள் !!



 


Friday, September 6, 2013

காதல் கவிதை


உள்ளதை சொல்லிடவா - என்
உள்ளத்தை அள்ளிடவா !

தீப்பொறி பட்டால்தான்
மெழுகு கூட உருகும்  - உன்
பார்வை பட்டாலே - என்
மேனி என்றும் இளகும் !!

கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு - செல்லாதே !
கலவரம் செய்தாலும் பரவாயில்லை
உனை காணாமல்
எனை கொல்லாதே !

மெழுகு  சிலைபோன்றவளே
உனைக்  கண்டால் - நான்
சிலையாகிறேன் !!

என் வாழ்வில்  அரசியாக - நான்
விலையாகிறேன் !!

என் வாழ்வில் வந்துவிடு !
என்  வாழ்க்கையை தந்துவிடு

Friday, August 30, 2013

விநாயகர் சதுர்த்தி - 2013

முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கெல்லாம்
முதல்வனே !

சிவனின்
புதல்வனே !

யானை முகம் கொண்ட
ஆதவனே !

தம்பிக்கு துணை நின்ற
தூயவனே !

சமய யோசனையால்
ஞான பழத்தை வென்றெடுத்த
நாயகனே !

இசையின் நாதமே !
உன்  தும்பிக்கையே
எங்கள் வாழ்வின்
நம்பிக்கை !

வாழ்க இறைவா !

சுதந்திரம் - 2013

                    சுதந்திரம்!
                    சுதந்திரம்!

                    அடைந்துவிட்டோம்
                    சுதந்திரம்!

                    வந்தே மாதரம்
                    என்று சொல்லியே
                    பெற்றுவிட்டோம்
                    சுதந்திரம்!
                       
                   வந்தே மாதரம்
                   இது  இந்தியர்களின்
                   தாரக மந்திரம்!
              
                   கொல்லையர்களிடமும்
                   வெள்ளையர்களிடமும்
                   போராடி பெற்ற
                   சுதந்திரம் !

                   செந்நீர்  வடித்து -பலர்
                   கண்ணீர்  வடித்து  -பெற்ற
                   சுதந்திரம் !

                   தாய் மண்ணை  - காக்க
                   வெள்ளையர்களிடம்
                   போராடி  - தன்
                   தாயின்மணிக்கொடியை
                   உயர்த்தியே   மாண்ட
                   தமிழர் அல்லவா !
                   அவரே திருப்பூர்
                   குமரனல்லவா !

                    குண்டர்களிடமும் !
                    குண்டுகளிடமும்
                    மாண்டு  பெற்ற
                    சுதந்திரமல்லவா !

                   சுதந்திரம்  என்பது
                   நாம்  முன்னோடியாக - வாழ
                   நம்  முன்னோர்கள்
                   செய்த  உயிர்  -  தியாகமல்லவா !
                   சுதந்திரம்
                   நம் உயிர் மூச்சல்லவா !
               
வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !



                  
                   

Thursday, August 8, 2013

இரமலான் வாழ்த்துகள்


வட்ட வடிவமான இவ் வுலகத்தில்
முக்கோணமாய் மூன்று மதங்கள் இருந்தாலும்
மனங்கள் ஒன்றுதான் - ஆதலால்
சதுரமாய் ,
சமமாய் நிற்போம் !!
சகோதரதுவமாய் வசிப்போம் !!
சமத்துவமாய் வாழ்வோம் !!
-------------------இரமலான்  வாழ்த்துகள்