Friday, August 30, 2013

சுதந்திரம் - 2013

                    சுதந்திரம்!
                    சுதந்திரம்!

                    அடைந்துவிட்டோம்
                    சுதந்திரம்!

                    வந்தே மாதரம்
                    என்று சொல்லியே
                    பெற்றுவிட்டோம்
                    சுதந்திரம்!
                       
                   வந்தே மாதரம்
                   இது  இந்தியர்களின்
                   தாரக மந்திரம்!
              
                   கொல்லையர்களிடமும்
                   வெள்ளையர்களிடமும்
                   போராடி பெற்ற
                   சுதந்திரம் !

                   செந்நீர்  வடித்து -பலர்
                   கண்ணீர்  வடித்து  -பெற்ற
                   சுதந்திரம் !

                   தாய் மண்ணை  - காக்க
                   வெள்ளையர்களிடம்
                   போராடி  - தன்
                   தாயின்மணிக்கொடியை
                   உயர்த்தியே   மாண்ட
                   தமிழர் அல்லவா !
                   அவரே திருப்பூர்
                   குமரனல்லவா !

                    குண்டர்களிடமும் !
                    குண்டுகளிடமும்
                    மாண்டு  பெற்ற
                    சுதந்திரமல்லவா !

                   சுதந்திரம்  என்பது
                   நாம்  முன்னோடியாக - வாழ
                   நம்  முன்னோர்கள்
                   செய்த  உயிர்  -  தியாகமல்லவா !
                   சுதந்திரம்
                   நம் உயிர் மூச்சல்லவா !
               
வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !



                  
                   

No comments: