Monday, April 13, 2015

தமிழர் திருநாள் வாழ்த்துகள்-2015

சித்திரை ஒன்று !!
தமிழர் திருநாள்' !!
ஆட்சி மாறினால்
தை' திருநாள்! - தமிழர்' திருநாள் !
ஆம்
ஆதவன் உதித்தால்
தை ஒன்று !
இலை செழித்தால்
சித்திரை ஒன்று !
கோடைக்காலமாய்
பொலக்குது வெய்யில் !!
மாட்டிக்கொண்டோம்
இவர்களுக்கைய்யில் !!
என்று மாறுமோ
இருவரின் போட்டி !!
என்று மலருமோ
வசந்த காலமாய் நல்லாட்சி !!
              --  தமிழர் திருநாள் வாழ்த்துகள் --

Tuesday, February 17, 2015

காதல் - பரிணாம வளர்ச்சி கொண்ட ஆன்மா!!

காதல்
ஒரு பரிணாம  வளர்ச்சி கொண்ட ஆன்மா !!
அனைத்து கிரகங்கள்
சுழலும் வரை
இக்காதல் சுழலும் !!

தட்டி பறிப்பதில் இல்லை - காதல் !!
தானா பூப்பதுதான் - காதல் !!

தவிக்க விடுவதில் இல்லை - காதல்!!
நொடி பொழுதாகிலும்
உன் நினைப்பால் தவித்து விடுவது -காதல் !!

விட்டு பிடிப்பதில் இல்லை  - காதல்
விட்டு கொடுப்பது தான் - காதல்

பிரிந்திருப்பதில் இல்லை  - காதல்!
உன் நினைப்பால் மீண்டும் ,மீண்டும்
பிறந்துகொண்டே  இருப்பது - காதல் !!

நினைத்துகொண்டே இருப்பதில்  இல்லை - காதல்!
உன் வாழ்வு சிறக்க
உன் நினைப்பை இழந்துவிடுவதும் - காதல் !!

உன் பிரிவால்
மனம் பிரேதலிப்பதில் இல்லை - காதல் !!
மறுதலிப்பதுதான் -காதல் !!

உன்  பிரிவால்
இறப்பதில் இல்லை  - காதல் !!
வலி கொண்ட இதயத்தால்
வாழ்ந்துகாட்டுவது - காதல் !!

பிறந்த  காதல்
என்றும் இறப்பது இல்லை !!
யாரும் மறுப்பதற்கில்லை !!

Friday, December 5, 2014

சாதி- நீதி

படிப்பில்லாமல்
இருந்தது - சாதி
படித்தபிறகும்
ஏனடா (சாதியை )
கட்டி அழுகிறாய்  - நீதி
எப்படி சொல்கிறாய்
உனக்கு நீ உயர்ந்தவன் என்றும் !
மற்றவன் தாழ்ந்தவன் என்றும் !
சாதியில் இல்லை
உன் உயர்வு !
நல் பாதையை தேடு
நாம் சமம் என்று கூறு !!
நான் கூறுகிறேன்  நீ உயர்ந்தவன்
என்று !!
சாதி எனும் சாக்கடையை
ஏன் இன்னும் ,மூக்கை
பிடித்துகொண்டு
முகர்கிறாய் !!

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’
                                                                                                        - Dr.Ambethkar

Monday, July 7, 2014

இனம்

கொழும்பு
என்கிறார்  ஒருவர் -புரியாமல்
கொழம்புகிறான் நம் -தமிழன் !
இடைமறித்தேன்
இனமென்று !
புரிந்துகொண்டேன்  -ஈழமென்று !
அறிந்துகொண்டேன் -பச்சை தமிழென்று !!
நலம் விசாரித்தேன் -அவரிடம்
புரிந்துகொண்டேன்,
வாயை மூடினால்
வாழ்க்கை நடத்தலாமென்று !
என்னடா உலகம் இது?
இடம் பெயர்ந்தவன் ஆளுகிறான் !!
ஆண்டவன் -அலைகிறான் !!

M.G.R Lines ..
(ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் விளங்கட்டுமே !!
வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று விளங்கட்டுமே !!)






Tuesday, June 24, 2014

நித்திரையில் - சிந்தனை

நித்திரையில்   - சிந்தனை !!
யாருக்கும் செய்யவில்லை - நிந்தனை !!
மனமில்லை என்று நினைக்கும்
உறவுகளால்  வேதனை !!
கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது போல
இங்கே கலங்கிகொண்டிருக்கிறது
என் மனம் !!
அவர்களின் எதிர்பார்ப்பு நியாயம் தான் !!
என் முயற்சியின் வேகம் அநியாயம் தான் !!
தேங்கிகொன்டிருக்கிறது என் முன்னேற்றம் !!
தூங்கிக்கொண்டிருக்கிறது என் முயற்சி !!
பிறக்கும் பொழுது எதையும் கொண்டு வரவில்லை !!
போகும் பொழுது எதையும் கொண்டு செல்வதில்லை !!
ஆனால்
இடைப்பட்ட காலத்தில் யாருக்கும் சுமையாக இல்லாமல்
சுமை தாங்கியாக இருக்க விரும்புகிறேன் !!

ஏமாற்றம் எண்ணம் என்னில் இல்லை !!
ஏமாறவும் இனி தயாராக இல்லை !!

மீளுவேன் இந்த தேக்கத்தில் இருந்து
மேலே வருவேன் இந்த தாக்கத்தை வைத்து !!