Friday, December 5, 2014

சாதி- நீதி

படிப்பில்லாமல்
இருந்தது - சாதி
படித்தபிறகும்
ஏனடா (சாதியை )
கட்டி அழுகிறாய்  - நீதி
எப்படி சொல்கிறாய்
உனக்கு நீ உயர்ந்தவன் என்றும் !
மற்றவன் தாழ்ந்தவன் என்றும் !
சாதியில் இல்லை
உன் உயர்வு !
நல் பாதையை தேடு
நாம் சமம் என்று கூறு !!
நான் கூறுகிறேன்  நீ உயர்ந்தவன்
என்று !!
சாதி எனும் சாக்கடையை
ஏன் இன்னும் ,மூக்கை
பிடித்துகொண்டு
முகர்கிறாய் !!

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’
                                                                                                        - Dr.Ambethkar

Monday, July 7, 2014

இனம்

கொழும்பு
என்கிறார்  ஒருவர் -புரியாமல்
கொழம்புகிறான் நம் -தமிழன் !
இடைமறித்தேன்
இனமென்று !
புரிந்துகொண்டேன்  -ஈழமென்று !
அறிந்துகொண்டேன் -பச்சை தமிழென்று !!
நலம் விசாரித்தேன் -அவரிடம்
புரிந்துகொண்டேன்,
வாயை மூடினால்
வாழ்க்கை நடத்தலாமென்று !
என்னடா உலகம் இது?
இடம் பெயர்ந்தவன் ஆளுகிறான் !!
ஆண்டவன் -அலைகிறான் !!

M.G.R Lines ..
(ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் விளங்கட்டுமே !!
வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று விளங்கட்டுமே !!)






Tuesday, June 24, 2014

நித்திரையில் - சிந்தனை

நித்திரையில்   - சிந்தனை !!
யாருக்கும் செய்யவில்லை - நிந்தனை !!
மனமில்லை என்று நினைக்கும்
உறவுகளால்  வேதனை !!
கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது போல
இங்கே கலங்கிகொண்டிருக்கிறது
என் மனம் !!
அவர்களின் எதிர்பார்ப்பு நியாயம் தான் !!
என் முயற்சியின் வேகம் அநியாயம் தான் !!
தேங்கிகொன்டிருக்கிறது என் முன்னேற்றம் !!
தூங்கிக்கொண்டிருக்கிறது என் முயற்சி !!
பிறக்கும் பொழுது எதையும் கொண்டு வரவில்லை !!
போகும் பொழுது எதையும் கொண்டு செல்வதில்லை !!
ஆனால்
இடைப்பட்ட காலத்தில் யாருக்கும் சுமையாக இல்லாமல்
சுமை தாங்கியாக இருக்க விரும்புகிறேன் !!

ஏமாற்றம் எண்ணம் என்னில் இல்லை !!
ஏமாறவும் இனி தயாராக இல்லை !!

மீளுவேன் இந்த தேக்கத்தில் இருந்து
மேலே வருவேன் இந்த தாக்கத்தை வைத்து !!


Monday, May 5, 2014

தேர்தல் முடிவு (Election Result )- 2014

ஆட்சியை பிடித்தது பா.ஜ.க
தமிழகத்தை பிடித்தது அ .தி .மு .க
தமிழகத்தில் தளர்ந்தது தி.மு.க

Tuesday, January 28, 2014

தேர்தல் களம் - 2014

கறை  படிந்த "கை "
நாட்டை கறையாக்கிவிட்டது !!

கறை  துடைக்க
வாருங்கள் அனைவரும்
வேட்டையாட !!

தேர்தல் களத்திற்கு
போவோம் ஓட்டு  போட !!



Monday, January 6, 2014

பொங்கல் நல்வாழ்த்துகள் - 2014

பொங்கல்  நல்வாழ்த்துகள் - 2014

Thursday, January 2, 2014

பிரபஞ்ச காதல்

ஓர  விழிகொண்டு  தாக்குகிறாய் !
மௌன விழிகொண்டு பேசுகிறாய் !

ஊமை விழிகொண்டு  கிழித்த
என் இதயத்தில்
உயிரோட்டமாய் குருதி நனையுதடி !!

என் மனவாட்டம்  இரவில்
உன் நினைவால் சுருதி  இசைக்குதடி !!

காதல் வயப்பட்ட என் இதயம்
நண்பனின் தங்கை என்றதும்
தயங்குதடி !!

இச்சையில்லா நம் காதல் -என்றதும்
உன் நினைவால்
இதயம் துடிக்குதடி !!

உன் மௌன வினாவுக்கு
என் வாய்மொழி விடை
கொடுத்ததடி !!

விடை கொடுத்த பிறகு
என் இதய பெட்டிக்குள்
மடலை எடுக்க ஏனடி
மறுக்கிறாய்  - பவி !

நானே உன் வாழ்வில் வந்த
முதல்  பாவி !!

"கட்டினால்      --பவி
 இல்லையேல்
கட்டுவேன்     --காவி "