Wednesday, November 19, 2008

அன்பின் நினைவுகள்

நிலவின்றி -வானில்லை!
நீயன்றி -நானில்லை!
நிலவு என்றும் -தேய்வதில்லை-உன்
நினைவலைகள் என்றும் ஓய்வதில்லை!
நினைக்காத- நாளில்லை-உன்னை
நினைக்காமல் - நானில்லை!

Saturday, November 8, 2008

பெண்களே எது அழகு!

"பெண்களே
எது அழகு!

பண்பாட்டை மீறி
நாகரீகம் என்று
அ-நாகரிமாக -குறைவான
ஆடை அணிகிறாயே
அதுவா அழகு!

பண்பாட்டுடன்
கரைபடியாத- நிறைவான
ஆடை அணிகிறார்களே
அதுவல்லவா அழகு!

ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!

கற்-காலத்திலே
ஆடையில்லா-காலத்திலே
தன் -மானத்தைக் காப்பற்ற
இலை -எடுத்து
உடலை -மறைத்து
(தன்)-மானத்தோடு -வாழ்ந்தார்கள்
அன்றோ!

ஆனால் இன்றோ!
நாகரீகம் என்ற- போர்வையில்
மக்களின் -பார்வையில்
விலை -கொடுத்து
குறை-ஆடை உடுத்தி
(தன்)-மானத்தை-இழக்கிறார்களே!
இதுவா - அழகு!

ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!

தாரமாக,தாயாக,மாற்றான் தாயாக-இவ்வாறு
உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்- நீங்களே!

ஆதலால்
அரை-குறையைப் பற்றி
நிறைவாக கூற-விரும்பவில்லை
எனில்,
மார்க் ட்வின் கூறியதுபோல
"பெண்களே உஙகளை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்"!

Thursday, November 6, 2008

குடியின் தாக்கம்-குடும்பத்தை தாக்கும்


அன்புள்ள அப்பா,
நீ
குடிப்பதனால் வருவது,
போதையின் -மயக்கம்

அதனால் எனக்கு ஏற்படுவது
வாழ்வின் -தயக்கம்

"குடி" -நீ குடித்தால்
பரவாயில்லை!

"குடி" -உன்னை குடிக்கிறதே!
அதுதான் எனக்கு வருத்தம்!

Wednesday, November 5, 2008

பருவ -காலம்

"கைகளினால் போடும் கோலம் -நிலக்கோலம்
என்றால்!
கால்களினால் போடும் கோலம் -மணக்கோலமா!?

நிலக்கோலத்திற்கு வண்ணம் தீட்டி-ஆழகுபடுத்துகிறாள்
என்றால்!
மணக்கோலத்திற்கு தன் எண்ணம் கூட்டி-ஆழகுபடுத்துகிறாள்!

நிலக்கோலம் போடுவதற்க்கு-பருவகாலம்
என்றால்!

மணக்கோலம் போடுவதற்க்கும் -பருவகாலம்
தானோ?

Tuesday, November 4, 2008

மனதின் - மயக்கம்


"மை வைக்கும் மங்கயரை பார்த்து!
மயங்காமல் இருந்துவிட்டால் ,
மடயனாகும்-உன் வாழ்வு
மானுடமாகும்!

பூ வைக்கும் மங்கயரை!
fooo... என்ரு-உதரிவிட்டால்,
புன்னாகும் -உன் வாழ்வு
புனிதமாகும்!".

Monday, November 3, 2008

காதல்



"உன்னிடம் ஒன்று சொல்ல துடிக்கிறது
 இதயம் !

உண்மையை சொல்ல ஏனோ மறுக்கிறது
உதடுகள் !

உன் கண்ணுடன் பேசும்பொழுது -வார்த்தை
முட்டுகிறது !

உன் நிழலின் மண்ணுடன் பேசும்பொழுது -வார்த்தை
கொட்டுகிறது !

உன் -கண்கள் என்ன லேசர் ஒளியா !
என்னை செயலிழக்க செய்கிறதே !

உன் கண்களால் ஏற்பட்ட காயத்தை !
உன் கண் -இறகினால் வருடி கொடு
ஆறு (ம்) -தலாக இருக்கட்டும் !".

படித்ததில் பிடித்தது

"உள்ள சொந்தம் எல்லாமே
சும்மா சும்மா தான்!

"உண்மையான சொந்தம் -உன்
அம்மா அம்மா தான் !".