Monday, December 30, 2013

என்ன சொல்லி விழுகிறது மழை

கார் மேகம் கொண்டு 
சூழுவேன் !

காள மேகம் கொண்டு 
பாடுவேன் !
இன்னல் விலக 
மின்னல் போல் 
வருவேன் !
ஜன்னல் ஓரம் 
மழை  சாரல் 
செய்வேன் !
துளி,துளியாய்  - விழுந்து 
துயர் துடைப்பேன் !

அலை ,அலையாய் - எழுந்து
மீண்டும் 
உயிர் பிறப்பேன் !

என்னுயிர்  தோழன் 
உழவனல்லவா !!
பிறர் பசியை போக்கும் 
புனிதனல்லவா !!
என்னுயிர் தந்து 
நட்புயிர் காப்பேன் !
இருவரும் இணைந்து
மண்ணுயிர் காப்போம் !!
(என  சொல்லி  விழுகிறது மழை !!)



No comments: