Friday, August 30, 2013

விநாயகர் சதுர்த்தி - 2013

முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கெல்லாம்
முதல்வனே !

சிவனின்
புதல்வனே !

யானை முகம் கொண்ட
ஆதவனே !

தம்பிக்கு துணை நின்ற
தூயவனே !

சமய யோசனையால்
ஞான பழத்தை வென்றெடுத்த
நாயகனே !

இசையின் நாதமே !
உன்  தும்பிக்கையே
எங்கள் வாழ்வின்
நம்பிக்கை !

வாழ்க இறைவா !

சுதந்திரம் - 2013

                    சுதந்திரம்!
                    சுதந்திரம்!

                    அடைந்துவிட்டோம்
                    சுதந்திரம்!

                    வந்தே மாதரம்
                    என்று சொல்லியே
                    பெற்றுவிட்டோம்
                    சுதந்திரம்!
                       
                   வந்தே மாதரம்
                   இது  இந்தியர்களின்
                   தாரக மந்திரம்!
              
                   கொல்லையர்களிடமும்
                   வெள்ளையர்களிடமும்
                   போராடி பெற்ற
                   சுதந்திரம் !

                   செந்நீர்  வடித்து -பலர்
                   கண்ணீர்  வடித்து  -பெற்ற
                   சுதந்திரம் !

                   தாய் மண்ணை  - காக்க
                   வெள்ளையர்களிடம்
                   போராடி  - தன்
                   தாயின்மணிக்கொடியை
                   உயர்த்தியே   மாண்ட
                   தமிழர் அல்லவா !
                   அவரே திருப்பூர்
                   குமரனல்லவா !

                    குண்டர்களிடமும் !
                    குண்டுகளிடமும்
                    மாண்டு  பெற்ற
                    சுதந்திரமல்லவா !

                   சுதந்திரம்  என்பது
                   நாம்  முன்னோடியாக - வாழ
                   நம்  முன்னோர்கள்
                   செய்த  உயிர்  -  தியாகமல்லவா !
                   சுதந்திரம்
                   நம் உயிர் மூச்சல்லவா !
               
வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !



                  
                   

Thursday, August 8, 2013

இரமலான் வாழ்த்துகள்


வட்ட வடிவமான இவ் வுலகத்தில்
முக்கோணமாய் மூன்று மதங்கள் இருந்தாலும்
மனங்கள் ஒன்றுதான் - ஆதலால்
சதுரமாய் ,
சமமாய் நிற்போம் !!
சகோதரதுவமாய் வசிப்போம் !!
சமத்துவமாய் வாழ்வோம் !!
-------------------இரமலான்  வாழ்த்துகள்