Tuesday, August 10, 2010

இரயில் பயணம்

மரங்கள் இளைப்பாறும் போதுதான் ,
இலைகள் கூட சிந்தும் ,
செடிகளில் மாலைபொழுதில் தான் ,
மொட்டுகள் கூட மலரும்
காதல் மணங்கள் நிலைப்படும்பொழுதான்,
நல்ல கவிதைகள் பிறக்கும் !

நிச்சயமாய்
அவளை காதலிக்கிறேன்
நிச்சயத்திற்கு பிறகே !

இரயில் பயணம் - அவளுடன்
முதல் பயணம்

நிசப்தமாய் பேச
தேர்ந்தெடுத்தேன் - இப்பாதையை
இரயில் பாதையை !

இரயில் என்ஜின் மூச்சுகொட்ட
ஆரம்பிக்கிறேன் எனது - பேச்சை ,

பேச நினைத்தேன் -ஆவலுடன்
ஆனால் பேச முடியவில்லை - அவளுடன்

ஏனென்றால்
கண்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
குறுக்கே
வார்த்தைகளுக்கு - இடமில்லை

செல்லவேண்டிய இடமோ - வெகுதூரமில்லை
பேசாமலே கடந்துவிட்டோம் -பாதி தூரம்
பேசவேண்டுமே - சிலமணி நேரம் !

கண்கள் பட படக்க !
உதடுகள் துடி துடிக்க !
மேனி என்றும் மெய்சிலிர்க்க !


மறுபடியும் ,
ஆரம்பிக்கிறேன் எனது - பேச்சை

என் பேச்சின் குறுக்கே காபி , காபி
என்று சில குரல்கள்

ஆசை முகத்தை பார்த்துகொண்டிருந்த - நான்
திசை திருப்பிய குரலை நோக்கினேன் !
அவனோ -பிளாட்பாரத்தில் ,
இரயிலோ தண்டவாளத்தில்
நின்று கொண்டிருந்தது !


ஆரம்பம் சூடாக இருந்தாலும் ,
காபி பருகிக்கொண்டே பேசலாம் என்று
முடிவெடுத்தேன் !
என்ஜின் கூட புறப்பட தீர்மானித்தது !

நாங்கள் பேசிகொண்டிருக்கும் பொழுது - அங்கே
ஒரு குரல் கடலை , கடலை என்று !

அவள் குலுங்கி ,குலுங்கி சிரித்தால்
இருவரும் பெசிகொண்டிருப்பதை பார்த்து
கிண்டல் என்று !

அவள் சிரித்த கணமே !
முத்து மணிபோல் சிதறியது !
எனது சிந்தனை !

எனை மறந்தேன்!
விண்ணில் பறந்தேன் !

இது உலா பயணம் தானே !
நிலா பயணம் ஆனதே - அருகில்
நிலவை வைத்துக்கொண்டு !

ஏனோ தெரியவில்லை
இரயில் - சொர்க்கபூரிக்கு
செல்லாமல்
சொர்க்கத்திற்கு வந்ததா !
இல்லை
அருகில் அவள்
இருப்பதால் சொர்க்கமே -எனை
தேடி வந்ததா !

என ஆச்சர்யப்படுவதற்க்குமுன்
சொல்லாமல் என் "நா" தடம்புரண்டது
செல்லவேண்டிய இடமோ வந்து சேர்ந்தது !

அவள்
கரம்பிடித்து இறங்கினேன் ,
வீழ்ந்துகிடக்கிறேன் - தனியாக
என் படுக்கையின் மேலிருந்து

உண்மையறிந்தேன் ,
இது இரயில் பயணம் -அல்ல
கனவு பயணம் என்று !

2 comments:

Srinivas said...

//பேச நினைத்தேன் -ஆவலுடன்
ஆனால் பேச முடியவில்லை - அவளுடன்

ஏனென்றால்
கண்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
குறுக்கே
வார்த்தைகளுக்கு - இடமில்லை
//

Superb!!!

Unknown said...

Machi Super da....Most of them related