Friday, July 2, 2010

அழகு தேவதை!


அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !

உனை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!

உனை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !

உனை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !

உனை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !

உனை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !

என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !

கோலி விழி கொண்டு - எனை
கோலமிட்டு செல்கிறாய் !

பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சு போட்டியில்
எனை, பேசாமலே வெல்கிறாய் !

விழி கொண்டு - எனக்கு
வழி தருவாய் !

புன்னகைத்து - எனக்கு
விடை தருவாய் !

அன்று அவையிலே
தேவியின் கூந்தல்
செயற்கை மணமென்றான்
நக்கீரன் !

உனை கண்டிருந்தால்
தேவியின் கூந்தல்
இயற்கை மணமென்றிருப்பான்!
அவையிலே அவன் வென்றிருப்பான் !

அன்று சொன்னதும் - உண்மைதான் !
இன்று சொல்வதும் - உண்மைதான் !

உன்
இதழோரம் - சிவப்பு !
இடையோரம் -மறைப்பு !
இருந்தாலும் -என் மனம்
உனை அள்ளதுடிக்கிறது
வாழ்வில் வெல்லதுடிக்கிறது!

2 comments:

Parivallal Dhanasekaran said...

such a wonderfull last 5 lins

Unknown said...

பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சு போட்டியில்
எனை, பேசாமலே வெல்கிறாய் !

Nice lines da keep it up..