Friday, April 22, 2016

May 16 - Election 2016

என் நாடு - என் சுதந்திரம் !!

என் ஓட்டு - என் உரிமை !!

தன்மானம் விடுபவன் அல்ல !!

என் ஓட்டு விற்பனைக்கு  அல்ல !!

வாழ்க  ஜன நாயகம் !! - வளர்க பாரதம் !!

Sunday, April 17, 2016

அன்னையின் கதறல்

எழுந்து வா - மகனே !!
எழுந்து வா !!
பாலூட்டி ,சீராட்டி
செல்வமாய்  நீ வளர்ந்த ,
ஒருவனாய் நீ இருக்க !
செங்கரும்பாய் நான் வளர்த்த !!
மெத்த படிப்பு படித்து
மேதாவியாய் ஆக
அனுப்பி வைத்தேனே அன்று !!
மேலாவியாய் ஆகிவிட்டான் என்று
அனுப்பி வைத்தான் ஓலை -காலன்
இன்று !!

மண்ணில் கை பட்டாலே !
வெள்ளம் கொண்டு  நான் கழுவ !
செந்நீரில் மிதக்கிறாயே !
எதைக் கொண்டு நான் கழுவ ?
பொய்யான  சேதியாய் இருக்கவேண்டுமென
மனம் பதைக்க !!
உண்மை என்றவுடன் ,
மனம் பதறுதடா.. !!
இதயம் துடிதுடிக்க ,
இரத்தம் உறையுதடா.. !!
பொய்யென கூறிட
எழுந்து வா - என் செல்வமே !
எழுந்து வா !!
மெத்த படிப்பு வேண்டாம் !
மேதாவியாக வேண்டாம் !
அன்னை மடியில் படுத்துறங்க
எழுந்து வா - என் மகனே !
எழுந்து வா !!

Monday, March 14, 2016

கல்லூரி

அரும்பு மீசை -துளிர்விடும் !
குறும்பு பார்வை -வெளிவரும் !
கரும்பு போல இனிக்கும் - நட்பு
காவியம் மறையா  - காதல் !!
குருதி போல நனையும் - நம்
நினையும் நாட்கள் !!
கல்லூரி ....

ஒழுக்கம் கற்பிக்கும் - கோயில் !
மேதாவிகளை செதுக்கும் -பல்லவபுரம் !!
நட்பு பயிலும் -  நூலகம் !
சுற்றி திரியும் - பூகோளம் !!

Wednesday, February 17, 2016

வாழ்த்துகிறோம்.....

செடியில் பூத்த - வண்ணப்பூ
கொடியில்  பூத்த - செல்லப்பூ
பெரியோர்களால் கோர்த்த
மலர்மாலை!
இன்று
மணமாலையாய்!!
 நீங்கள்...
நல்மனதோடும்,
நறுமணத்தோடும் ,
வாழ வாழ்த்துகிறோம் !!

வாழ்த்து மடல்

அன்பெனும் வீட்டில்
பண்புகளை புகுத்தி
பாசத்தை - நிரப்பி
சுவாசம் எனும் கூட்டில்
உயிரோட்டமாய் வாழ!!
வாழ்த்துகிறோம் ....