Wednesday, December 7, 2016

J.J அம்மா வின் இறப்பு!! - நெஞ்சில் கனகனத்தது நெருப்பு !!

J.J அம்மா  - கண்ணீர் அஞ்சலி
********************************
தமிழ் நாட்டின் நலனுக்காக
ஓங்கி ஒலித்த ஒலி
மரணித்துவிட்டது !!
இருண்ட தமிழகத்தை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்த
ஒளி விளக்கு
அனைந்துவிட்டது !!
துணிச்சலான வீர மங்கையை
தமிழகம்
இழந்துவிட்டது !!

போராட்ட  குணம் படைத்த
அம்மா !!
நீங்கள் இல்லாத நாடு இனி
சும்மா !!

அம்மா  CM-ன்  ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் !!

Friday, April 22, 2016

May 16 - Election 2016

என் நாடு - என் சுதந்திரம் !!

என் ஓட்டு - என் உரிமை !!

தன்மானம் விடுபவன் அல்ல !!

என் ஓட்டு விற்பனைக்கு  அல்ல !!

வாழ்க  ஜன நாயகம் !! - வளர்க பாரதம் !!

Sunday, April 17, 2016

அன்னையின் கதறல்

எழுந்து வா - மகனே !!
எழுந்து வா !!
பாலூட்டி ,சீராட்டி
செல்வமாய்  நீ வளர்ந்த ,
ஒருவனாய் நீ இருக்க !
செங்கரும்பாய் நான் வளர்த்த !!
மெத்த படிப்பு படித்து
மேதாவியாய் ஆக
அனுப்பி வைத்தேனே அன்று !!
மேலாவியாய் ஆகிவிட்டான் என்று
அனுப்பி வைத்தான் ஓலை -காலன்
இன்று !!

மண்ணில் கை பட்டாலே !
வெள்ளம் கொண்டு  நான் கழுவ !
செந்நீரில் மிதக்கிறாயே !
எதைக் கொண்டு நான் கழுவ ?
பொய்யான  சேதியாய் இருக்கவேண்டுமென
மனம் பதைக்க !!
உண்மை என்றவுடன் ,
மனம் பதறுதடா.. !!
இதயம் துடிதுடிக்க ,
இரத்தம் உறையுதடா.. !!
பொய்யென கூறிட
எழுந்து வா - என் செல்வமே !
எழுந்து வா !!
மெத்த படிப்பு வேண்டாம் !
மேதாவியாக வேண்டாம் !
அன்னை மடியில் படுத்துறங்க
எழுந்து வா - என் மகனே !
எழுந்து வா !!

Monday, March 14, 2016

கல்லூரி

அரும்பு மீசை -துளிர்விடும் !
குறும்பு பார்வை -வெளிவரும் !
கரும்பு போல இனிக்கும் - நட்பு
காவியம் மறையா  - காதல் !!
குருதி போல நனையும் - நம்
நினையும் நாட்கள் !!
கல்லூரி ....

ஒழுக்கம் கற்பிக்கும் - கோயில் !
மேதாவிகளை செதுக்கும் -பல்லவபுரம் !!
நட்பு பயிலும் -  நூலகம் !
சுற்றி திரியும் - பூகோளம் !!

Wednesday, February 17, 2016

வாழ்த்துகிறோம்.....

செடியில் பூத்த - வண்ணப்பூ
கொடியில்  பூத்த - செல்லப்பூ
பெரியோர்களால் கோர்த்த
மலர்மாலை!
இன்று
மணமாலையாய்!!
 நீங்கள்...
நல்மனதோடும்,
நறுமணத்தோடும் ,
வாழ வாழ்த்துகிறோம் !!