Monday, December 30, 2013

என்ன சொல்லி விழுகிறது மழை

கார் மேகம் கொண்டு 
சூழுவேன் !

காள மேகம் கொண்டு 
பாடுவேன் !
இன்னல் விலக 
மின்னல் போல் 
வருவேன் !
ஜன்னல் ஓரம் 
மழை  சாரல் 
செய்வேன் !
துளி,துளியாய்  - விழுந்து 
துயர் துடைப்பேன் !

அலை ,அலையாய் - எழுந்து
மீண்டும் 
உயிர் பிறப்பேன் !

என்னுயிர்  தோழன் 
உழவனல்லவா !!
பிறர் பசியை போக்கும் 
புனிதனல்லவா !!
என்னுயிர் தந்து 
நட்புயிர் காப்பேன் !
இருவரும் இணைந்து
மண்ணுயிர் காப்போம் !!
(என  சொல்லி  விழுகிறது மழை !!)



புத்தாண்டு வாழ்த்துகள் -2014

அன்பாய் வந்தாய் !
அனைவரின் இல்லங்களிலும்
நுழைந்தாய் !

உன் பிறந்த நாளெனும்
புத்துணர்ச்சி கொடுத்தாய் !
பொங்கலெனும் புத்தாடை
கொடுத்தாய் !
ரமலான்  எனும் மனித
நேயத்தை கொடுத்தாய் !
தீபாவளி எனும் சிரிப்பை
கொடுத்தாய் !
கிறிஸ்து  எனும் புனிதத்தை
கொடுத்தாய் !

அனைத்து சந்தோசத்தையும்
கொடுத்த உனக்கு
விடை கொடுக்க - மனமில்லை !
வருபவனை வரவேற்க - தடையில்லை !

ஆதலால்
அன்புடன் சென்றுவா !
உன் நண்பனை வரவேற்க !
Good Bye - 2013
Welcome -  2014

Happy New Year - 2014

Thursday, October 31, 2013

தீபாவளி வாழ்த்துகள் - 2013

வீடுகளில்
தீப ஒளி ஏற்றுங்கள்
அரக்கன் எனும் இருள் - மறைந்து
வெளிச்சமாக மாறட்டும்  !!


களிப்புடன்  கொண்டாடுங்கள்
இனிப்புடன் நட்பை வழங்கி
சுவையுங்கள்
உறவுகள் பலம் பெறட்டும்  !!

புத்தாடை உடுத்துங்கள்
புதுமையான எண்ணங்கள்
பிறக்கட்டும் !!

இன்பம் வேண்டும்
துன்பம் வேண்டாம் !!
இறையன்பு வேண்டும்
இறைச்சல் வேண்டாம் !!
காற்று வேண்டும்
துர்நாற்றம் வேண்டாம் !

நம் வீடு சுத்தம் வேண்டும்
அதுபோல் மண்டலத்தில் உள்ள
பசுமை வீடு சுத்தம் வேண்டுமல்லவா
ஆதலால்

வெடிகளை தவிர்ப்போம் !!
மாசுபடுதலை குறைப்போம்  !!
நம் சந்ததிகள் வாழ !!







Monday, September 30, 2013

பேருந்து பயணம்


பேருந்தில்  பயணம்
கன்னியர்களுக்கு  கவனம் !!
வளையம்  போட்டு பாடுறான்
வளைக்க உன்ன பார்க்குறான்
உசாரு!!  உசாரு !!
படியில் தொங்கி  பார்க்கிறான்
உன் மனசை படிக்க பார்க்கிறான்
உசாரு  -எம்மா
 உசாரு !!
இவனுங்க
கல்லூரி  போவதே
கன்னியரைக்  காணத்தான் !!
பாசாங்கு பண்ணுவான்
படிப்பாளி போலத்தான் !!
தானா  ஆடுவான் !
கானா  பாடுவான் !
போலீஸ் வந்தாலே
தரை இறங்கி ஓடுவான் !
உசாரு - பாப்பா
உசாரு !

Sunday, September 29, 2013

நட்பின் பரிசு

நட்புக்கு - இலக்கணம் உண்டு !
தலைகணம் -இல்லை !

வெகுமானத்தை பெற்றுத்தருவதோ - நட்பு
அவமானத்தை பெற்றுத்தருவதோ -பிறரின் உறவுகள் ,

பிரியா - விடை கொடுத்தாலும்
பிரியாவிடை கொடுப்பது
நம் நட்பு !

வீடு வரை- மனைவி
காடுவரை - பிள்ளை
கடைசிவரை ( யாரோ ) - இல்லை
கடைசிவரை வரும் - நட்பு !