Friday, August 30, 2013

சுதந்திரம் - 2013

                    சுதந்திரம்!
                    சுதந்திரம்!

                    அடைந்துவிட்டோம்
                    சுதந்திரம்!

                    வந்தே மாதரம்
                    என்று சொல்லியே
                    பெற்றுவிட்டோம்
                    சுதந்திரம்!
                       
                   வந்தே மாதரம்
                   இது  இந்தியர்களின்
                   தாரக மந்திரம்!
              
                   கொல்லையர்களிடமும்
                   வெள்ளையர்களிடமும்
                   போராடி பெற்ற
                   சுதந்திரம் !

                   செந்நீர்  வடித்து -பலர்
                   கண்ணீர்  வடித்து  -பெற்ற
                   சுதந்திரம் !

                   தாய் மண்ணை  - காக்க
                   வெள்ளையர்களிடம்
                   போராடி  - தன்
                   தாயின்மணிக்கொடியை
                   உயர்த்தியே   மாண்ட
                   தமிழர் அல்லவா !
                   அவரே திருப்பூர்
                   குமரனல்லவா !

                    குண்டர்களிடமும் !
                    குண்டுகளிடமும்
                    மாண்டு  பெற்ற
                    சுதந்திரமல்லவா !

                   சுதந்திரம்  என்பது
                   நாம்  முன்னோடியாக - வாழ
                   நம்  முன்னோர்கள்
                   செய்த  உயிர்  -  தியாகமல்லவா !
                   சுதந்திரம்
                   நம் உயிர் மூச்சல்லவா !
               
வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !



                  
                   

Thursday, August 8, 2013

இரமலான் வாழ்த்துகள்


வட்ட வடிவமான இவ் வுலகத்தில்
முக்கோணமாய் மூன்று மதங்கள் இருந்தாலும்
மனங்கள் ஒன்றுதான் - ஆதலால்
சதுரமாய் ,
சமமாய் நிற்போம் !!
சகோதரதுவமாய் வசிப்போம் !!
சமத்துவமாய் வாழ்வோம் !!
-------------------இரமலான்  வாழ்த்துகள்

Thursday, July 4, 2013

பாசம்

பசி - பாசம் அறியாது !
(தாய்) பாசம் -பசி அறியாது !!
அதுதான்
தாய் !!

Friday, March 29, 2013

தன்னால் ஈழம் மலரும் !!

என்னால் ஈழம் மலருமா?
உன்னால் ஈழம் மலருமா?
இல்லை
தன்னால் ஈழம் மலரும்!!

தன்னுயிர் தந்த தமிழனால்
ஈழம் மலரும் !!
பார்ட்டி(அரசியல் ) கனைகளை  விடுத்து
போட்டி கனைகளை  தொடுத்து !!
தரையில்  இறங்கி  வா - தமிழா !!
தன்னால்  ஈழம் மலரும் !!

இந்திய விடுதலையில் முக்கிய
பங்காற்றிய  தமிழா !!
தமிழனுக்காக  தரையில் இறங்கி
போராட வா - தமிழா !!
தன்னால் ஈழம் மலரும்!!

கடைசி தமிழன் மூச்சு
உள்ளவரை போராட வா !!
தன்னால் ஈழம் மலரும் !!

Wednesday, September 28, 2011

ஜன நாயகம் !!

அனைவரும்

தேர்தலில் வாக்களிப்போம் !!

அநீதியை வேரறுப்போம் !!

ஜன நாயகத்தை மீட்டெடுப்போம் !!

வாழ்க ஜனநாயகம் !!