Monday, September 27, 2010

புன்னகை

"உன்னில் எனை தேடு உன் உள்ளத்திலிருந்து
வெளிவருவேன் உன் புன்னகை வழியாக "
-சந்தோசம்

Monday, September 6, 2010

குட் நைட்

கனவுகளில் இசை போடு
என் நினைவுகளை அசை போடு
என் மேல் இரக்கம் வரும்
நல் உறக்கம் வரும்

Monday, August 16, 2010

தலை குனிந்தேன்

பெண்கள் தலைநிமிர வேண்டும்
நினைத்த நானே!
தலைகுனியவைத்தேன் - அவளை !
அவள்
வெட்கப்பட்டு தலைகுனிந்ததை கண்டு
நானும் தலைகுனிந்தேன் !
வெட்கத்துடன் !

Tuesday, August 10, 2010

இரயில் பயணம்

மரங்கள் இளைப்பாறும் போதுதான் ,
இலைகள் கூட சிந்தும் ,
செடிகளில் மாலைபொழுதில் தான் ,
மொட்டுகள் கூட மலரும்
காதல் மணங்கள் நிலைப்படும்பொழுதான்,
நல்ல கவிதைகள் பிறக்கும் !

நிச்சயமாய்
அவளை காதலிக்கிறேன்
நிச்சயத்திற்கு பிறகே !

இரயில் பயணம் - அவளுடன்
முதல் பயணம்

நிசப்தமாய் பேச
தேர்ந்தெடுத்தேன் - இப்பாதையை
இரயில் பாதையை !

இரயில் என்ஜின் மூச்சுகொட்ட
ஆரம்பிக்கிறேன் எனது - பேச்சை ,

பேச நினைத்தேன் -ஆவலுடன்
ஆனால் பேச முடியவில்லை - அவளுடன்

ஏனென்றால்
கண்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
குறுக்கே
வார்த்தைகளுக்கு - இடமில்லை

செல்லவேண்டிய இடமோ - வெகுதூரமில்லை
பேசாமலே கடந்துவிட்டோம் -பாதி தூரம்
பேசவேண்டுமே - சிலமணி நேரம் !

கண்கள் பட படக்க !
உதடுகள் துடி துடிக்க !
மேனி என்றும் மெய்சிலிர்க்க !


மறுபடியும் ,
ஆரம்பிக்கிறேன் எனது - பேச்சை

என் பேச்சின் குறுக்கே காபி , காபி
என்று சில குரல்கள்

ஆசை முகத்தை பார்த்துகொண்டிருந்த - நான்
திசை திருப்பிய குரலை நோக்கினேன் !
அவனோ -பிளாட்பாரத்தில் ,
இரயிலோ தண்டவாளத்தில்
நின்று கொண்டிருந்தது !


ஆரம்பம் சூடாக இருந்தாலும் ,
காபி பருகிக்கொண்டே பேசலாம் என்று
முடிவெடுத்தேன் !
என்ஜின் கூட புறப்பட தீர்மானித்தது !

நாங்கள் பேசிகொண்டிருக்கும் பொழுது - அங்கே
ஒரு குரல் கடலை , கடலை என்று !

அவள் குலுங்கி ,குலுங்கி சிரித்தால்
இருவரும் பெசிகொண்டிருப்பதை பார்த்து
கிண்டல் என்று !

அவள் சிரித்த கணமே !
முத்து மணிபோல் சிதறியது !
எனது சிந்தனை !

எனை மறந்தேன்!
விண்ணில் பறந்தேன் !

இது உலா பயணம் தானே !
நிலா பயணம் ஆனதே - அருகில்
நிலவை வைத்துக்கொண்டு !

ஏனோ தெரியவில்லை
இரயில் - சொர்க்கபூரிக்கு
செல்லாமல்
சொர்க்கத்திற்கு வந்ததா !
இல்லை
அருகில் அவள்
இருப்பதால் சொர்க்கமே -எனை
தேடி வந்ததா !

என ஆச்சர்யப்படுவதற்க்குமுன்
சொல்லாமல் என் "நா" தடம்புரண்டது
செல்லவேண்டிய இடமோ வந்து சேர்ந்தது !

அவள்
கரம்பிடித்து இறங்கினேன் ,
வீழ்ந்துகிடக்கிறேன் - தனியாக
என் படுக்கையின் மேலிருந்து

உண்மையறிந்தேன் ,
இது இரயில் பயணம் -அல்ல
கனவு பயணம் என்று !

Friday, July 2, 2010

அழகு தேவதை!


அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !

உனை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!

உனை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !

உனை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !

உனை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !

உனை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !

என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !

கோலி விழி கொண்டு - எனை
கோலமிட்டு செல்கிறாய் !

பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சு போட்டியில்
எனை, பேசாமலே வெல்கிறாய் !

விழி கொண்டு - எனக்கு
வழி தருவாய் !

புன்னகைத்து - எனக்கு
விடை தருவாய் !

அன்று அவையிலே
தேவியின் கூந்தல்
செயற்கை மணமென்றான்
நக்கீரன் !

உனை கண்டிருந்தால்
தேவியின் கூந்தல்
இயற்கை மணமென்றிருப்பான்!
அவையிலே அவன் வென்றிருப்பான் !

அன்று சொன்னதும் - உண்மைதான் !
இன்று சொல்வதும் - உண்மைதான் !

உன்
இதழோரம் - சிவப்பு !
இடையோரம் -மறைப்பு !
இருந்தாலும் -என் மனம்
உனை அள்ளதுடிக்கிறது
வாழ்வில் வெல்லதுடிக்கிறது!