Tuesday, August 10, 2010

இரயில் பயணம்

மரங்கள் இளைப்பாறும் போதுதான் ,
இலைகள் கூட சிந்தும் ,
செடிகளில் மாலைபொழுதில் தான் ,
மொட்டுகள் கூட மலரும்
காதல் மணங்கள் நிலைப்படும்பொழுதான்,
நல்ல கவிதைகள் பிறக்கும் !

நிச்சயமாய்
அவளை காதலிக்கிறேன்
நிச்சயத்திற்கு பிறகே !

இரயில் பயணம் - அவளுடன்
முதல் பயணம்

நிசப்தமாய் பேச
தேர்ந்தெடுத்தேன் - இப்பாதையை
இரயில் பாதையை !

இரயில் என்ஜின் மூச்சுகொட்ட
ஆரம்பிக்கிறேன் எனது - பேச்சை ,

பேச நினைத்தேன் -ஆவலுடன்
ஆனால் பேச முடியவில்லை - அவளுடன்

ஏனென்றால்
கண்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
குறுக்கே
வார்த்தைகளுக்கு - இடமில்லை

செல்லவேண்டிய இடமோ - வெகுதூரமில்லை
பேசாமலே கடந்துவிட்டோம் -பாதி தூரம்
பேசவேண்டுமே - சிலமணி நேரம் !

கண்கள் பட படக்க !
உதடுகள் துடி துடிக்க !
மேனி என்றும் மெய்சிலிர்க்க !


மறுபடியும் ,
ஆரம்பிக்கிறேன் எனது - பேச்சை

என் பேச்சின் குறுக்கே காபி , காபி
என்று சில குரல்கள்

ஆசை முகத்தை பார்த்துகொண்டிருந்த - நான்
திசை திருப்பிய குரலை நோக்கினேன் !
அவனோ -பிளாட்பாரத்தில் ,
இரயிலோ தண்டவாளத்தில்
நின்று கொண்டிருந்தது !


ஆரம்பம் சூடாக இருந்தாலும் ,
காபி பருகிக்கொண்டே பேசலாம் என்று
முடிவெடுத்தேன் !
என்ஜின் கூட புறப்பட தீர்மானித்தது !

நாங்கள் பேசிகொண்டிருக்கும் பொழுது - அங்கே
ஒரு குரல் கடலை , கடலை என்று !

அவள் குலுங்கி ,குலுங்கி சிரித்தால்
இருவரும் பெசிகொண்டிருப்பதை பார்த்து
கிண்டல் என்று !

அவள் சிரித்த கணமே !
முத்து மணிபோல் சிதறியது !
எனது சிந்தனை !

எனை மறந்தேன்!
விண்ணில் பறந்தேன் !

இது உலா பயணம் தானே !
நிலா பயணம் ஆனதே - அருகில்
நிலவை வைத்துக்கொண்டு !

ஏனோ தெரியவில்லை
இரயில் - சொர்க்கபூரிக்கு
செல்லாமல்
சொர்க்கத்திற்கு வந்ததா !
இல்லை
அருகில் அவள்
இருப்பதால் சொர்க்கமே -எனை
தேடி வந்ததா !

என ஆச்சர்யப்படுவதற்க்குமுன்
சொல்லாமல் என் "நா" தடம்புரண்டது
செல்லவேண்டிய இடமோ வந்து சேர்ந்தது !

அவள்
கரம்பிடித்து இறங்கினேன் ,
வீழ்ந்துகிடக்கிறேன் - தனியாக
என் படுக்கையின் மேலிருந்து

உண்மையறிந்தேன் ,
இது இரயில் பயணம் -அல்ல
கனவு பயணம் என்று !

Friday, July 2, 2010

அழகு தேவதை!


அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !

உனை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!

உனை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !

உனை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !

உனை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !

உனை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !

என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !

கோலி விழி கொண்டு - எனை
கோலமிட்டு செல்கிறாய் !

பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சு போட்டியில்
எனை, பேசாமலே வெல்கிறாய் !

விழி கொண்டு - எனக்கு
வழி தருவாய் !

புன்னகைத்து - எனக்கு
விடை தருவாய் !

அன்று அவையிலே
தேவியின் கூந்தல்
செயற்கை மணமென்றான்
நக்கீரன் !

உனை கண்டிருந்தால்
தேவியின் கூந்தல்
இயற்கை மணமென்றிருப்பான்!
அவையிலே அவன் வென்றிருப்பான் !

அன்று சொன்னதும் - உண்மைதான் !
இன்று சொல்வதும் - உண்மைதான் !

உன்
இதழோரம் - சிவப்பு !
இடையோரம் -மறைப்பு !
இருந்தாலும் -என் மனம்
உனை அள்ளதுடிக்கிறது
வாழ்வில் வெல்லதுடிக்கிறது!

Thursday, June 10, 2010

செம்மொழி கவிதை

இனிக்கும் கனியை தேடு
நல் பணிவை தேடு
எம்மொழியிலே !

காரம் உண்டு -தமிழில்
வீரம் உண்டு -அதிலே
விவேகம் உண்டு
எம்மொழியிலே !

அகரம் தொடர்ந்து ,
உயிரோட்டமாய்,
ஔகாரம் -படர்ந்து
உயிர், மெய்யில் - கலந்து
சிகரம் தொட்டதடா
எம்மொழி !
அதுவே செம்மொழி!

காப்பியம் உண்டு -இதிலே
நல் வாக்கியம் உண்டு ,
அழகான அணிகலன் உண்டு ,
எம்மொழியிலே !

அழகுக்கும் தமிழே ,
அறிவுக்கும் தமிழே !

ஈரடி போதுமே
தமிழின்
திருவடி
தெரியும் -அதிலே
முக்காலத்தின் ஆழம்
புரியும்
எம்மொழியிலே !

அன்பை தேடு
அரவணைப்பை தேடு
எம்மொழிலே !

எஞ்ஞானம் உண்டு
விஞ்ஞானமும் உண்டு
எம்மொழியிலே !

பிறவாய் திறக்கட்டும்,
பிறழாமல் பேசட்டும்
எம்மொழியிலே !

"தமிழன் என்பதில்
பெருமிதம் கொள்வோம் !
தமிழுக்கு பெருமை
சேர்ப்போம்" !

எம்மொழி -செம்மொழி


Thursday, May 27, 2010

நீயன்றி நானா?

நீ இல்லாத இவ்விடத்தில்
தவிக்கிறேன் !
உன்னோடு பேசாத நிமிடத்தை
சபிக்கிறேன்!
நீரின்றி மீனா !
நீயன்றி நானா !