Friday, July 2, 2010

அழகு தேவதை!


அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !

உனை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!

உனை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !

உனை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !

உனை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !

உனை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !

என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !

கோலி விழி கொண்டு - எனை
கோலமிட்டு செல்கிறாய் !

பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சு போட்டியில்
எனை, பேசாமலே வெல்கிறாய் !

விழி கொண்டு - எனக்கு
வழி தருவாய் !

புன்னகைத்து - எனக்கு
விடை தருவாய் !

அன்று அவையிலே
தேவியின் கூந்தல்
செயற்கை மணமென்றான்
நக்கீரன் !

உனை கண்டிருந்தால்
தேவியின் கூந்தல்
இயற்கை மணமென்றிருப்பான்!
அவையிலே அவன் வென்றிருப்பான் !

அன்று சொன்னதும் - உண்மைதான் !
இன்று சொல்வதும் - உண்மைதான் !

உன்
இதழோரம் - சிவப்பு !
இடையோரம் -மறைப்பு !
இருந்தாலும் -என் மனம்
உனை அள்ளதுடிக்கிறது
வாழ்வில் வெல்லதுடிக்கிறது!

Thursday, June 10, 2010

செம்மொழி கவிதை

இனிக்கும் கனியை தேடு
நல் பணிவை தேடு
எம்மொழியிலே !

காரம் உண்டு -தமிழில்
வீரம் உண்டு -அதிலே
விவேகம் உண்டு
எம்மொழியிலே !

அகரம் தொடர்ந்து ,
உயிரோட்டமாய்,
ஔகாரம் -படர்ந்து
உயிர், மெய்யில் - கலந்து
சிகரம் தொட்டதடா
எம்மொழி !
அதுவே செம்மொழி!

காப்பியம் உண்டு -இதிலே
நல் வாக்கியம் உண்டு ,
அழகான அணிகலன் உண்டு ,
எம்மொழியிலே !

அழகுக்கும் தமிழே ,
அறிவுக்கும் தமிழே !

ஈரடி போதுமே
தமிழின்
திருவடி
தெரியும் -அதிலே
முக்காலத்தின் ஆழம்
புரியும்
எம்மொழியிலே !

அன்பை தேடு
அரவணைப்பை தேடு
எம்மொழிலே !

எஞ்ஞானம் உண்டு
விஞ்ஞானமும் உண்டு
எம்மொழியிலே !

பிறவாய் திறக்கட்டும்,
பிறழாமல் பேசட்டும்
எம்மொழியிலே !

"தமிழன் என்பதில்
பெருமிதம் கொள்வோம் !
தமிழுக்கு பெருமை
சேர்ப்போம்" !

எம்மொழி -செம்மொழி


Thursday, May 27, 2010

நீயன்றி நானா?

நீ இல்லாத இவ்விடத்தில்
தவிக்கிறேன் !
உன்னோடு பேசாத நிமிடத்தை
சபிக்கிறேன்!
நீரின்றி மீனா !
நீயன்றி நானா !

Monday, May 24, 2010

துள்ளும் விழி மீன் !!

கலைமானை காணாத ஏக்கத்தில்
தூக்கத்தை தொலைத்த எந்தன்
கண்களில்
விழி மீன் தடுமாற ,
நீந்துவதற்கு
ஏதுவாக
கண்ணீர் குளமாயின
எந்தன் கண்களில் !!