Wednesday, February 17, 2010

பிறரை நேசி

நீ பிறரை நேசி !
உன்னை நேசிப்பார்கள் என்பதற்காக அல்ல !
நீ வாழ்வில் பிரகாசிக்க!

Sunday, January 31, 2010

வாழ்வின் அர்த்தம்

"உள்ளதை - சொல்லிடவா!
என்
உள்ளத்தை- அள்ளிடவா !

தீப்பொறி பட்டால்தான்
மெழுகுகூட உருகும்
உன் அழகின் பார்வை
பட்டாலே
என் மேனி என்றும்
இளகும்

உன் கருவிழி பாதை
என் வாழ்வின்
வழி பாதை !

கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு
செல்லாதே !

கலவரம் செய்தாலும்
பரவாயில்லை
உன்னை காணாமல் என்னை
கொல்லாதே !

மெழுகு சிலை போன்றவளே
உன்னை கண்டால்
நான் சிலையாகிறேன் !

என் வாழ்வின் அரசியாக
நான்
விலையாகிறேன் !
என் வாழ்வில் வந்துவிடு
என் வாழ்க்கையை தந்துவிடு




Thursday, September 17, 2009

மதம்

மதம் பிடித்துவிட்டது
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் தான் !

ஆம் ,
மதம்பிடித்த யானை -வாழைத்தோப்பில்
இறங்கினால் .வாழை நாசமாகும் !
அதுபோல்
மனித வாழ்வில் மதம்பிடித்து இறங்கினால்
வாழ்வாதாரம் நாசமாகும் !
(மனிதன் எந்த மதமாய் இருந்தாலும் நல்ல மனம் வேண்டும் )

Wednesday, September 16, 2009

சாதனை

காதலித்தால் - சோதனை !
காதலிக்காவிட்டால் - சாதனை!

காதலர்களே - யாருக்கும் செய்யாதே நிந்தனை!
இதுவே என் போதனை !