நீ பிறரை நேசி !
உன்னை நேசிப்பார்கள் என்பதற்காக அல்ல !
நீ வாழ்வில் பிரகாசிக்க!
Wednesday, February 17, 2010
Sunday, January 31, 2010
வாழ்வின் அர்த்தம்
"உள்ளதை - சொல்லிடவா!
என்
உள்ளத்தை- அள்ளிடவா !
தீப்பொறி பட்டால்தான்
மெழுகுகூட உருகும்
உன் அழகின் பார்வை
பட்டாலே
என் மேனி என்றும்
இளகும்
உன் கருவிழி பாதை
என் வாழ்வின்
வழி பாதை !
கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு
செல்லாதே !
கலவரம் செய்தாலும்
பரவாயில்லை
உன்னை காணாமல் என்னை
கொல்லாதே !
மெழுகு சிலை போன்றவளே
உன்னை கண்டால்
நான் சிலையாகிறேன் !
என் வாழ்வின் அரசியாக
நான்
விலையாகிறேன் !
என் வாழ்வில் வந்துவிடு
என் வாழ்க்கையை தந்துவிடு
Friday, September 25, 2009
Thursday, September 17, 2009
மதம்
மதம் பிடித்துவிட்டது
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் தான் !
ஆம் ,
மதம்பிடித்த யானை -வாழைத்தோப்பில்
இறங்கினால் .வாழை நாசமாகும் !
அதுபோல்
மனித வாழ்வில் மதம்பிடித்து இறங்கினால்
வாழ்வாதாரம் நாசமாகும் !
(மனிதன் எந்த மதமாய் இருந்தாலும் நல்ல மனம் வேண்டும் )
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் தான் !
ஆம் ,
மதம்பிடித்த யானை -வாழைத்தோப்பில்
இறங்கினால் .வாழை நாசமாகும் !
அதுபோல்
மனித வாழ்வில் மதம்பிடித்து இறங்கினால்
வாழ்வாதாரம் நாசமாகும் !
(மனிதன் எந்த மதமாய் இருந்தாலும் நல்ல மனம் வேண்டும் )
Wednesday, September 16, 2009
சாதனை
காதலித்தால் - சோதனை !
காதலிக்காவிட்டால் - சாதனை!
காதலர்களே - யாருக்கும் செய்யாதே நிந்தனை!
இதுவே என் போதனை !
காதலிக்காவிட்டால் - சாதனை!
காதலர்களே - யாருக்கும் செய்யாதே நிந்தனை!
இதுவே என் போதனை !
Subscribe to:
Posts (Atom)