Monday, December 30, 2013

என்ன சொல்லி விழுகிறது மழை

கார் மேகம் கொண்டு 
சூழுவேன் !

காள மேகம் கொண்டு 
பாடுவேன் !
இன்னல் விலக 
மின்னல் போல் 
வருவேன் !
ஜன்னல் ஓரம் 
மழை  சாரல் 
செய்வேன் !
துளி,துளியாய்  - விழுந்து 
துயர் துடைப்பேன் !

அலை ,அலையாய் - எழுந்து
மீண்டும் 
உயிர் பிறப்பேன் !

என்னுயிர்  தோழன் 
உழவனல்லவா !!
பிறர் பசியை போக்கும் 
புனிதனல்லவா !!
என்னுயிர் தந்து 
நட்புயிர் காப்பேன் !
இருவரும் இணைந்து
மண்ணுயிர் காப்போம் !!
(என  சொல்லி  விழுகிறது மழை !!)



புத்தாண்டு வாழ்த்துகள் -2014

அன்பாய் வந்தாய் !
அனைவரின் இல்லங்களிலும்
நுழைந்தாய் !

உன் பிறந்த நாளெனும்
புத்துணர்ச்சி கொடுத்தாய் !
பொங்கலெனும் புத்தாடை
கொடுத்தாய் !
ரமலான்  எனும் மனித
நேயத்தை கொடுத்தாய் !
தீபாவளி எனும் சிரிப்பை
கொடுத்தாய் !
கிறிஸ்து  எனும் புனிதத்தை
கொடுத்தாய் !

அனைத்து சந்தோசத்தையும்
கொடுத்த உனக்கு
விடை கொடுக்க - மனமில்லை !
வருபவனை வரவேற்க - தடையில்லை !

ஆதலால்
அன்புடன் சென்றுவா !
உன் நண்பனை வரவேற்க !
Good Bye - 2013
Welcome -  2014

Happy New Year - 2014