Thursday, April 29, 2010

உறவுகள் கொடுத்த பரிசு

அன்புக்காகத் தான் நெருங்கினேன்
உன் அன்பினில் மூழ்கவே இறங்கினேன்!!

அன்பால் வந்த சில உறவுகள்
எனக்கு கொடுத்த பரிசு!!!!
வலிகளும்,
இந்த வரிகளும்
தான்!

Friday, April 9, 2010

கண்கள் பேசும் உண்மை

அவளை காணாமல் தவிக்கும்
என் கண்கள்
சொல்லுகிறது அவள்
இல்லை என்று !

இதயம் மறுக்கிறது என்னுள் தானே
குடியிருக்கிறாள் என்று !

இதய துடிப்பின் புலம்பலைக் கண்டு
கண்கள் கண்ணீர் வடிக்கிறது!

கண்கள் தானே சொல்லியது
அவள் உன் தேவதை என்று!

அதே கண்கள் சொல்லுகிறது
அவளை காணவில்லை என்று !

ஆதலால் பரிசீலனை செய்யாமலே
மறுத்தது இதயம்

இதய துடிப்பாய் அவள் நினைப்பு
என்னுள் தான்
குடியிருக்கிறாள் என்றது !

விழிகள் வழிமாறி ,தடுமாறி
அவள் சென்ற வழித்தடத்தை
காண அங்குமிங்குமாய்
நீந்துவதை கண்ட
இதயம்

சிந்தித்து ,உள்ளத்தை
சந்தித்தது
உண்மையை மட்டுமே பேசும்
கண்கள் சொல்வது உண்மை தானோ?
என்ற பதட்டத்தில்
இதய சுவற்றில் மோதுகிறது
செந்நீராய் வடிகிறது
கண்களில் கண்ணீராய்
வழிகிறது!!!!





Sunday, April 4, 2010

கலையாத நினைவுகள்

கடற்கரையில் இருக்கும் சிலையே !
மண்ணில் உதித்த கலையே !
என்னில் பதித்த கவியே !

உன்னில் என்னை பதித்தேன்
கரையமாட்டாய் என்ற
நம்பிக்கையில்

கரைவாய், கலைவாய்
என்று தெரிந்திருந்தால்
என்னில் உன்னை பதித்திருப்பேன்

கரையாமல் காத்திருப்பேன்

கலையாமல் சேர்ந்திருப்பேன்