Thursday, June 10, 2010

செம்மொழி கவிதை

இனிக்கும் கனியை தேடு
நல் பணிவை தேடு
எம்மொழியிலே !

காரம் உண்டு -தமிழில்
வீரம் உண்டு -அதிலே
விவேகம் உண்டு
எம்மொழியிலே !

அகரம் தொடர்ந்து ,
உயிரோட்டமாய்,
ஔகாரம் -படர்ந்து
உயிர், மெய்யில் - கலந்து
சிகரம் தொட்டதடா
எம்மொழி !
அதுவே செம்மொழி!

காப்பியம் உண்டு -இதிலே
நல் வாக்கியம் உண்டு ,
அழகான அணிகலன் உண்டு ,
எம்மொழியிலே !

அழகுக்கும் தமிழே ,
அறிவுக்கும் தமிழே !

ஈரடி போதுமே
தமிழின்
திருவடி
தெரியும் -அதிலே
முக்காலத்தின் ஆழம்
புரியும்
எம்மொழியிலே !

அன்பை தேடு
அரவணைப்பை தேடு
எம்மொழிலே !

எஞ்ஞானம் உண்டு
விஞ்ஞானமும் உண்டு
எம்மொழியிலே !

பிறவாய் திறக்கட்டும்,
பிறழாமல் பேசட்டும்
எம்மொழியிலே !

"தமிழன் என்பதில்
பெருமிதம் கொள்வோம் !
தமிழுக்கு பெருமை
சேர்ப்போம்" !

எம்மொழி -செம்மொழி


Thursday, May 27, 2010

நீயன்றி நானா?

நீ இல்லாத இவ்விடத்தில்
தவிக்கிறேன் !
உன்னோடு பேசாத நிமிடத்தை
சபிக்கிறேன்!
நீரின்றி மீனா !
நீயன்றி நானா !

Monday, May 24, 2010

துள்ளும் விழி மீன் !!

கலைமானை காணாத ஏக்கத்தில்
தூக்கத்தை தொலைத்த எந்தன்
கண்களில்
விழி மீன் தடுமாற ,
நீந்துவதற்கு
ஏதுவாக
கண்ணீர் குளமாயின
எந்தன் கண்களில் !!

Monday, May 10, 2010

மறைந்தாய் -என்னை மறந்தாய்

வாய்மை நிலைக்கும் பொழுது
பொய்மை மறைந்து போகும்!

உன்னை நினைக்கும்பொழுது
என் மெய்யே மறந்துபோகும்!
மேகமாய் கலைந்துபோகும் !

என்னையே மறக்கும்
உந்தன் நினைவுகள்
எப்படி மறந்தது
என்னை?