Thursday, May 27, 2010

நீயன்றி நானா?

நீ இல்லாத இவ்விடத்தில்
தவிக்கிறேன் !
உன்னோடு பேசாத நிமிடத்தை
சபிக்கிறேன்!
நீரின்றி மீனா !
நீயன்றி நானா !

Monday, May 24, 2010

துள்ளும் விழி மீன் !!

கலைமானை காணாத ஏக்கத்தில்
தூக்கத்தை தொலைத்த எந்தன்
கண்களில்
விழி மீன் தடுமாற ,
நீந்துவதற்கு
ஏதுவாக
கண்ணீர் குளமாயின
எந்தன் கண்களில் !!

Monday, May 10, 2010

மறைந்தாய் -என்னை மறந்தாய்

வாய்மை நிலைக்கும் பொழுது
பொய்மை மறைந்து போகும்!

உன்னை நினைக்கும்பொழுது
என் மெய்யே மறந்துபோகும்!
மேகமாய் கலைந்துபோகும் !

என்னையே மறக்கும்
உந்தன் நினைவுகள்
எப்படி மறந்தது
என்னை?

Thursday, April 29, 2010

உறவுகள் கொடுத்த பரிசு

அன்புக்காகத் தான் நெருங்கினேன்
உன் அன்பினில் மூழ்கவே இறங்கினேன்!!

அன்பால் வந்த சில உறவுகள்
எனக்கு கொடுத்த பரிசு!!!!
வலிகளும்,
இந்த வரிகளும்
தான்!

Friday, April 9, 2010

கண்கள் பேசும் உண்மை

அவளை காணாமல் தவிக்கும்
என் கண்கள்
சொல்லுகிறது அவள்
இல்லை என்று !

இதயம் மறுக்கிறது என்னுள் தானே
குடியிருக்கிறாள் என்று !

இதய துடிப்பின் புலம்பலைக் கண்டு
கண்கள் கண்ணீர் வடிக்கிறது!

கண்கள் தானே சொல்லியது
அவள் உன் தேவதை என்று!

அதே கண்கள் சொல்லுகிறது
அவளை காணவில்லை என்று !

ஆதலால் பரிசீலனை செய்யாமலே
மறுத்தது இதயம்

இதய துடிப்பாய் அவள் நினைப்பு
என்னுள் தான்
குடியிருக்கிறாள் என்றது !

விழிகள் வழிமாறி ,தடுமாறி
அவள் சென்ற வழித்தடத்தை
காண அங்குமிங்குமாய்
நீந்துவதை கண்ட
இதயம்

சிந்தித்து ,உள்ளத்தை
சந்தித்தது
உண்மையை மட்டுமே பேசும்
கண்கள் சொல்வது உண்மை தானோ?
என்ற பதட்டத்தில்
இதய சுவற்றில் மோதுகிறது
செந்நீராய் வடிகிறது
கண்களில் கண்ணீராய்
வழிகிறது!!!!