Thursday, May 27, 2010

நீயன்றி நானா?

நீ இல்லாத இவ்விடத்தில்
தவிக்கிறேன் !
உன்னோடு பேசாத நிமிடத்தை
சபிக்கிறேன்!
நீரின்றி மீனா !
நீயன்றி நானா !

Monday, May 24, 2010

துள்ளும் விழி மீன் !!

கலைமானை காணாத ஏக்கத்தில்
தூக்கத்தை தொலைத்த எந்தன்
கண்களில்
விழி மீன் தடுமாற ,
நீந்துவதற்கு
ஏதுவாக
கண்ணீர் குளமாயின
எந்தன் கண்களில் !!

Monday, May 10, 2010

மறைந்தாய் -என்னை மறந்தாய்

வாய்மை நிலைக்கும் பொழுது
பொய்மை மறைந்து போகும்!

உன்னை நினைக்கும்பொழுது
என் மெய்யே மறந்துபோகும்!
மேகமாய் கலைந்துபோகும் !

என்னையே மறக்கும்
உந்தன் நினைவுகள்
எப்படி மறந்தது
என்னை?