Sunday, January 31, 2010

வாழ்வின் அர்த்தம்

"உள்ளதை - சொல்லிடவா!
என்
உள்ளத்தை- அள்ளிடவா !

தீப்பொறி பட்டால்தான்
மெழுகுகூட உருகும்
உன் அழகின் பார்வை
பட்டாலே
என் மேனி என்றும்
இளகும்

உன் கருவிழி பாதை
என் வாழ்வின்
வழி பாதை !

கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு
செல்லாதே !

கலவரம் செய்தாலும்
பரவாயில்லை
உன்னை காணாமல் என்னை
கொல்லாதே !

மெழுகு சிலை போன்றவளே
உன்னை கண்டால்
நான் சிலையாகிறேன் !

என் வாழ்வின் அரசியாக
நான்
விலையாகிறேன் !
என் வாழ்வில் வந்துவிடு
என் வாழ்க்கையை தந்துவிடு